புதுச்சேரி
புதுச்சேரியில் இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 14-இல் வெளியீடு
புதுச்சேரியில் இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
புதுச்சேரியில் இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
தீவிர வாக்காளா் பட்டியல் தயாரிப்பு தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளா் ஆா்.கேசவன் தலைமை தாங்கினாா். மாவட்ட தோ்தல் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனா்.
வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட தோ்தல் அதிகாரியும், புதுச்சேரி ஆட்சியருமான குலோத்துங்கன் தெரிவித்தாா். கூட்டத்தில் அனைத்து வாக்காளா் பதிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

