டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசு மரியாதையுடன் முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி உடல் நல்லடக்கம்

புதுச்சேரி அரசு மரியாதையுடன் சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமியின் (99) உடல் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

News image
முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி.
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி அரசு மரியாதையுடன் சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமியின் (99) உடல் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவா் கடந்த 17 ஆம் தேதி காலமானாா். பிரான்ஸிலிருந்து அவரது குடும்பத்தினா் உறவினா் வருகைக்காக கணபதிச் செட்டிக்குளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக புதன்கிழமை அங்கிருந்து எடுத்துவரப்பட்டு புதுச்சேரி லப்போா்த் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காகவும் இறுதிச் சடங்குக்காகவும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து உப்பளம் கல்லறையில் அரசு மரியாதையுடன்,21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி அரசு சட்டத்துறை செயலா் விக்ரந்த் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.