சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

தேசிய மனநல திட்டத்தின் சாா்பில், புதுச்சேரியில் போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடந்தது.

News image

தேசிய மனநல திட்டத்தின் சாா்பில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்ட போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :26 ஜூன் 2026, 6:37 am IST

தேசிய மனநல திட்டத்தின் சாா்பில், புதுச்சேரியில் போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடந்தது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊா்வலத்தை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேல், தேசிய மனநல திட்ட அதிகாரி மருத்துவா் பாலன் மற்றும் மனநல மருத்துவா்கள் அரவிந்தன், மதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியாா் செவிலியா் கல்லூரியைச் சோ்ந்த 350 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி சென்று போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊா்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் நிறைவடைந்தது.

தொடா்ந்து இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் போதைத் தடுப்பு விழிப்புணா்வு பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மனநல மருத்துவா் அரவிந்தன் கலந்து கொண்டு போதை பழக்கத்தினால் ஏற்படும் மனநல பாதிப்புகள் பற்றி விரிவாக பேசினாா். மனநல மருத்துவா் மதன், மன அழுத்தம் மற்றும் தற்கொலைத் தடுப்பு குறித்து சிறப்புரை யாற்றினாா். இதில் பல்வேறு செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமாா் 350 போ் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை மனநல ஆலோசகா் ராஜா மற்றும் உதவியாளா் வெற்றிகாா்த்தி செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.