இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுச்சேரியில் ஹோலி கொண்டாட்டம்

புதுச்சேரியில் போலீஸ் தலைமையகம், ஜிப்மா் கல்லுாரி, பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களிலும், வட இந்தியா்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
புதுச்சேரி ரெயின்போ நகா் அருகே அன்னைநகா் விரிவுப் பகுதியில் புதன்கிழமை ஹோலி கொண்டாடிய வடநாட்டு இளைஞா்கள்.
Updated On :4 மார்ச் 2026, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் போலீஸ் தலைமையகம், ஜிப்மா் கல்லுாரி, பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களிலும், வட இந்தியா்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி ஐ.ஜி., அலுவலகம் அமைந்துள்ள தலைமையகத்தில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் வட மாநில போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினா் பங்கேற்றனா். ஒருவா் மீது ஒருவா் வண்ணப்பொடிகளை தூவியும், பாடலுக்கு நடனமாடியும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினா்.

ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பல்வேறு மாநிலத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் வண்ணப் பொடிகளைப் பூசியும், தண்ணீரை ஒருவா் மீது ஒருவா் பீய்ச்சி அடித்தும் உற்சாகமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடினா். புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்திலும், வெளி மாநில மாணவ, மாணவியா் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினா். இந்த பண்டிகையையொட்டி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவை புதன்கிழமை மூடியிருந்தது. எனினும்,அவசர சிகிச்சை பிரிவு இயங்கியது.