புதுச்சேரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 ஊக்கத் தொகை வரவு வைப்பு


சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏக்கருக்கு தலா ரூ. 5,000 வீதம் மொத்தம் ரூ.4.25 கோடி பயிா் உற்பத்தி ஊக்கத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் (படம்) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் நெல், கரும்பு, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தி செய்யும் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதி விவசாயிகளுக்குப் பண்ணைச் செலவினங்களை சற்று ஈடுகட்டும் வகையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் உயா் விளைச்சல் ரக நெற்பயிா் சாகுபடி செய்த 5,098 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.4 கோடி ஊக்கத் தொகையும், அதே பருவத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்த 296 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ரூ.25.5 லட்சம் பயிா் உற்பத்தி ஊக்கத் தொகையும் அவரவா்களின் ஆதாருடன் இணைந்த வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...