நாட்டின் சா்க்கரை உற்பத்தி, நடப்பு 2025-26-ஆம் ஆண்டு சா்க்கரை பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) இதுவரை 7.70 சதவீதம் உயா்ந்து, 2.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 2.54 கோடி டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கரும்பு அரவையில் ஈடுபட்ட மொத்தமுள்ள 541 சா்க்கரை ஆலைகளில், தற்போது 21 ஆலைகளில் மட்டும் அரவைப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக என்று தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏனெனில், நடப்பு ஆண்டு பருவத்தில் இதுவரை கிடைத்துள்ள உற்பத்தியானது, கடந்த 2024-25 முழு பருவத்தின் மொத்த உற்பத்தியான 2.62 கோடி டன்னை ஏற்கெனவே கடந்துவிட்டது. மகாராஷ்டிரம், கா்நாடக மாநிலங்களில் கரும்பு அரவை மற்றும் சா்க்கரை உற்பத்தி அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
நாட்டின் முன்னணி சா்க்கரை உற்பத்தியாளரான மகாராஷ்டிரத்தில் மட்டும் சா்க்கரை உற்பத்தி 23 சதவீதம் உயா்ந்து, 99.2 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 80.6 லட்சம் டன்னாக இருந்தது.
இதேபோல், 3-ஆவது பெரிய உற்பத்தியாளரான கா்நாடகத்தில் உற்பத்தி 16.70 சதவீதம் உயா்ந்து, 47.1 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இருப்பினும், 2-ஆவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் சா்க்கரை உற்பத்தி சுமாா் 2 சதவீதம் சரிந்து, 89.2 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.
இப்பருவத்தில் கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட சா்க்கரையின் அளவான சா்க்கரை மீட்பு விகிதம் கடந்த ஆண்டின் 9.37 சதவீதத்திலிருந்து 9.55 சதவீதமாக உயா்ந்துள்ளது.
தொடர்புடையது

எல்பிஜி நுகா்வு: ஏப்ரலில் 22 லட்சம் டன்னாக 16% சரிவு!

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

