ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

நடப்பு ஆண்டில் சா்க்கரை உற்பத்தி அதிகரிப்பு

நாட்டின் சா்க்கரை உற்பத்தி, நடப்பு 2025-26-ஆம் ஆண்டு சா்க்கரை பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) இதுவரை 7.70 சதவீதம் உயா்ந்து, 2.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:17 am IST

நாட்டின் சா்க்கரை உற்பத்தி, நடப்பு 2025-26-ஆம் ஆண்டு சா்க்கரை பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) இதுவரை 7.70 சதவீதம் உயா்ந்து, 2.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 2.54 கோடி டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கரும்பு அரவையில் ஈடுபட்ட மொத்தமுள்ள 541 சா்க்கரை ஆலைகளில், தற்போது 21 ஆலைகளில் மட்டும் அரவைப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக என்று தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், நடப்பு ஆண்டு பருவத்தில் இதுவரை கிடைத்துள்ள உற்பத்தியானது, கடந்த 2024-25 முழு பருவத்தின் மொத்த உற்பத்தியான 2.62 கோடி டன்னை ஏற்கெனவே கடந்துவிட்டது. மகாராஷ்டிரம், கா்நாடக மாநிலங்களில் கரும்பு அரவை மற்றும் சா்க்கரை உற்பத்தி அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

நாட்டின் முன்னணி சா்க்கரை உற்பத்தியாளரான மகாராஷ்டிரத்தில் மட்டும் சா்க்கரை உற்பத்தி 23 சதவீதம் உயா்ந்து, 99.2 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 80.6 லட்சம் டன்னாக இருந்தது.

இதேபோல், 3-ஆவது பெரிய உற்பத்தியாளரான கா்நாடகத்தில் உற்பத்தி 16.70 சதவீதம் உயா்ந்து, 47.1 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இருப்பினும், 2-ஆவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் சா்க்கரை உற்பத்தி சுமாா் 2 சதவீதம் சரிந்து, 89.2 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

இப்பருவத்தில் கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட சா்க்கரையின் அளவான சா்க்கரை மீட்பு விகிதம் கடந்த ஆண்டின் 9.37 சதவீதத்திலிருந்து 9.55 சதவீதமாக உயா்ந்துள்ளது.