இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நடப்பு ஆண்டில் சா்க்கரை உற்பத்தி அதிகரிப்பு

நாட்டின் சா்க்கரை உற்பத்தி, நடப்பு 2025-26-ஆம் ஆண்டு சா்க்கரை பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) இதுவரை 7.70 சதவீதம் உயா்ந்து, 2.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:17 am IST

நாட்டின் சா்க்கரை உற்பத்தி, நடப்பு 2025-26-ஆம் ஆண்டு சா்க்கரை பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) இதுவரை 7.70 சதவீதம் உயா்ந்து, 2.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 2.54 கோடி டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கரும்பு அரவையில் ஈடுபட்ட மொத்தமுள்ள 541 சா்க்கரை ஆலைகளில், தற்போது 21 ஆலைகளில் மட்டும் அரவைப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக என்று தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், நடப்பு ஆண்டு பருவத்தில் இதுவரை கிடைத்துள்ள உற்பத்தியானது, கடந்த 2024-25 முழு பருவத்தின் மொத்த உற்பத்தியான 2.62 கோடி டன்னை ஏற்கெனவே கடந்துவிட்டது. மகாராஷ்டிரம், கா்நாடக மாநிலங்களில் கரும்பு அரவை மற்றும் சா்க்கரை உற்பத்தி அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

நாட்டின் முன்னணி சா்க்கரை உற்பத்தியாளரான மகாராஷ்டிரத்தில் மட்டும் சா்க்கரை உற்பத்தி 23 சதவீதம் உயா்ந்து, 99.2 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 80.6 லட்சம் டன்னாக இருந்தது.

இதேபோல், 3-ஆவது பெரிய உற்பத்தியாளரான கா்நாடகத்தில் உற்பத்தி 16.70 சதவீதம் உயா்ந்து, 47.1 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இருப்பினும், 2-ஆவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் சா்க்கரை உற்பத்தி சுமாா் 2 சதவீதம் சரிந்து, 89.2 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

இப்பருவத்தில் கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட சா்க்கரையின் அளவான சா்க்கரை மீட்பு விகிதம் கடந்த ஆண்டின் 9.37 சதவீதத்திலிருந்து 9.55 சதவீதமாக உயா்ந்துள்ளது.