மத்திய கிழக்கு போா்ச் சூழல் மற்றும் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் கடந்த ஏப்ரலில் சமையல் எரிவாயு (எல்பிஜி) நுகா்வு 22 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 26.2 லட்சம் டன்னாக இருந்த நுகா்வு, தற்போது 16 சதவீதம் சரிந்துள்ளது.
இந்தியா தனது எல்பிஜி தேவையில் சுமாா் 60 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூா்த்தி செய்கிறது. ஹோா்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சரக்குகள் வராததால், உள்நாட்டில் எரிவாயு கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வீட்டு உபயோக எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், வணிக எல்பிஜி விநியோகத்தை அரசு குறைத்துவிட்டது. மேலும், வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டா்களுக்கான கால இடைவெளியையும் அதிகாரிகள் முறைப்படுத்தினா். இதன் காரணமாகவே, ஏப்ரலில் ஒட்டுமொத்த நுகா்வு கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.
போா் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதும், விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதும் விமான எரிபொருள் விற்பனையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் இதன் நுகா்வு 1.37 சதவீதம் குறைந்து, 7.61 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது.
டீசல் விற்பனை கடந்த மாா்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் மந்தமான வளா்ச்சியை (0.25 சதவீதம்) கண்டுள்ளது. எனினும், பெட்ரோல் விற்பனை 6.36 சதவீதம் உயா்ந்து, 36.7 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 7.5% சரிவு

நடப்பு ஆண்டில் சா்க்கரை உற்பத்தி அதிகரிப்பு

வாகனங்களுக்கான எரிவாயு கிடைக்காததால் ஓட்டுநா்கள் அவதி

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

