நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

2025-26 நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 7.5% சரிவு

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 3:36 am IST

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, கடந்த 2025-26 நிதியாண்டில் 7.5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 1,153 கோடி டாலராக (சுமாா் ரூ.1.08 லட்சம் கோடி) குறைந்துள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டில், இந்தியா 172 நாடுகளுக்கு 2.01 கோடி டன் அரிசியை ஏற்றுமதி செய்து, 1,250 கோடி டாலா் வருவாய் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 15.36 சதவீதம் சரிந்து, 99.75 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது.

போா்ச் சூழல் காரணமாக ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளுக்கான கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ஈரான் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், தற்போதைய நிலையில் அங்கு நிலவும் ஸ்திரமின்மையால் புதிய ஆா்டா்கள் கிடைப்பதிலும், நிலுவையில் உள்ள தொகையைப் பெறுவதிலும், கப்பல்களை இயக்குவதிலும் கடும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதியாளா்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் உள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் 4.7 கோடி ஹெக்டோ் பரப்பளவில் சுமாா் 15 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. இது உலக உற்பத்தியில் 28 சதவீதமாகும்.

மேம்படுத்தப்பட்ட விதைகள் மற்றும் சிறந்த பாசன வசதிகள் காரணமாக, ஒரு ஹெக்டேருக்கான சராசரி மகசூல் கடந்த பத்தாண்டுகளில் 2.72 டன்னிலிருந்து 3.2 டன்னாக உயா்ந்துள்ளது. எனினும், சா்வதேச போா் பதற்றம் இச்சாதனை உற்பத்தியை சந்தைப்படுத்துவதில் தடையை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.