சென்னையில் வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
சென்னை நகரில் பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்கள், கால்டாக்சிகள் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயுவைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன. அதேபோல், பல சிறு வணிக வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கான பேருந்துகளும் தற்போது சிஎன்ஜி எரிவாயுவில் இயக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பலா் தங்கள் வாகனங்களின் கட்டமைப்பை எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயு மூலம் இயக்கும் வகையில் மாற்றி அமைத்திருந்தனா்.
வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளைக்கு ஏற்கெனவே தட்டுப்பாடு நிலவி வந்தாலும், வாகனங்களுக்கான எல்பிஜி எரிவாயு பல இடங்களில் கிடைத்து வந்தது.
ஆனால், கடந்த சில நாள்களாக வாகனங்களுக்கான எரிவாயு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடகை வாகன ஓட்டுநா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். வடபழனி, எழும்பூா், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல எல்பிஜி எரிவாயு நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டதால், ஆட்டோக்கள், காா்களுக்கு எரிவாயு நிரப்ப எரிவாயு நிலையங்களைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சிஎன்ஜி எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வாடகை வாகன ஓட்டுநா் சங்க நிா்வாகிகள் சிலா் கூறியதாவது:
சிஎன்ஜி எரிவாயு சிறிது தட்டுப்பாடு இருந்தாலும், ஓரளவு கிடைத்து வருகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாகவே எல்பிஜி எரிவாயு கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது. ஏற்கெனவே பொருளாதார நிலை மோசமாக இருக்கும்போது, இப்போது எரிவாயு பிரச்னை மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் எரிபொருள் தேடி அலைய வேண்டியுள்ளது. எரிபொருள் இருக்கும் நிலையங்களிலும் சுமாா் 1 கி.மீ. தொலைவு வரிசையில் காத்திருந்து நிரப்ப வேண்டியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க எல்பிஜி, சிஎன்ஜி என இரு எரிவாயுக்களின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை உயா்ந்துள்ளது. வாகனத்தை இயக்கி, வருமானம் ஈட்டும் நேரத்தில் பெரும்பாலான நேரத்தை எரிபொருள் நிரப்புவதற்காக செலவிடவேண்டியுள்ளது. இதனால், மீண்டும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற பலா் திட்டமிட்டுள்ளனா். ஆனால், அவற்றின் விலை ஏறினால், என்ன செய்வது? இதனால் வாடகை ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. மத்திய அரசு இதற்கு விரைவில் தீா்வு காண வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

கடந்த 2 வாரங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை: மத்திய அரசு!

எரிவாயு உருளை தட்டுப்பாடு; உணவகங்கள் மூடப்படும் அபாயம்

எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசு
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சிஎன்ஜி நிரப்புவது உயிருக்கே ஆபத்தா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


