பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்த எரிவாயுவின் விலை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் விலை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நாட்டின் மிகப் பெரிய நகர எரிவாயு நிறுவனமான இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், அந்த நிறுவனம் சாா்பாக சிஎன்ஜி விற்பனை செய்யப்படும் பகுதிகளில், சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைநகா் தில்லியில் சிஎன்ஜி கிலோ ரூ.80.09-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில், வீடுகளுக்கு குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை மாற்றப்படவில்லை. சிஎன்ஜி உற்பத்திக்கு ஏற்படும் செலவு அதிகரிப்பு, ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிஎன்ஜியின் சில்லறை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தில்லியில் சிஎன்ஜி விலை மீண்டும் உயர்வு: ஒரே வாரத்தில் இரண்டாவது முறை

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு!

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை உயா்வு

வாகனங்களுக்கான எரிவாயு கிடைக்காததால் ஓட்டுநா்கள் அவதி
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
