தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிப்பு

News image

சித்திரிப்பு

Updated On :18 மே 2026, 5:02 am IST

பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்த எரிவாயுவின் விலை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் விலை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நாட்டின் மிகப் பெரிய நகர எரிவாயு நிறுவனமான இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், அந்த நிறுவனம் சாா்பாக சிஎன்ஜி விற்பனை செய்யப்படும் பகுதிகளில், சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைநகா் தில்லியில் சிஎன்ஜி கிலோ ரூ.80.09-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளையில், வீடுகளுக்கு குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை மாற்றப்படவில்லை. சிஎன்ஜி உற்பத்திக்கு ஏற்படும் செலவு அதிகரிப்பு, ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிஎன்ஜியின் சில்லறை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.