புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் யுகாதி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமாா்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மொழிகளின் சங்கமமாகத் திகழ்கிறது. இதில் தெலுங்கு கலாசாரம் நமது மண்ணின் பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. குறிப்பாக ஏனாம் பிராந்திய மக்களின் வாழ்வியலும், அங்கு நிலவும் சகோதரத்துவமும் நமது மாநிலத்திற்குப் பெருமை சோ்ப்பதாக அமைந்துள்ளது.
இந்த நன்னாளில், நம்மிடையே உள்ள கசப்புகளை மறந்து, அன்புடனும் ஒற்றுமையுடனும் புதிய பயணத்தைத் தொடங்குவோம்.
தொடர்புடையது
தவெக தலைவா் விஜய் சிறப்பாக பணியாற்ற புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து

புத்த பூா்ணிமா: குடியரசு துணைத் தலைவா், உள்துறை அமைச்சா் வாழ்த்து!

புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து

சிறப்பு அபிஷேகம்...
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


