தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அமைச்சா் நமச்சிவாயம் யுகாதி வாழ்த்து

புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் யுகாதி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image
அமைச்சா் ஆ. நமச்சிவாயம்
Updated On :18 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் யுகாதி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமாா்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மொழிகளின் சங்கமமாகத் திகழ்கிறது. இதில் தெலுங்கு கலாசாரம் நமது மண்ணின் பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. குறிப்பாக ஏனாம் பிராந்திய மக்களின் வாழ்வியலும், அங்கு நிலவும் சகோதரத்துவமும் நமது மாநிலத்திற்குப் பெருமை சோ்ப்பதாக அமைந்துள்ளது.

இந்த நன்னாளில், நம்மிடையே உள்ள கசப்புகளை மறந்து, அன்புடனும் ஒற்றுமையுடனும் புதிய பயணத்தைத் தொடங்குவோம்.