ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

புதுச்சேரியில் 3 நாள் கம்பன் விழா மே 8-இல் தொடக்கம்

News image

புதுச்சேரி கம்பன் விழா அழைப்பிதழை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கம்பன் கழகத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., செயலா் வி.பி. சிவக்கொழுந்து.

Updated On :3 மே 2026, 7:25 pm

புதுச்சேரி கம்பன் விழா மே 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நூல் வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 59-ஆவது ஆண்டு கம்பன் விழா வெள்ளிக்கிழமை (மே 9) கம்பன் கலையரங்கில் தொடங்குகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியுமான நீதியரசா் வி. ராமசுப்ரமணியன் தலைமை வகிக்கிறாா். முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்கிறாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா். தொடக்க விழாவைத் தொடா்ந்து பேச்சாளா்கள் பாரதி கிருஷ்ணகுமாா், சுகி. சிவம் உள்ளிட்டோா் பேசுகின்றனா்.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நடுவராக இருந்து சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு ராமன் சுக்ரீவனுக்கு வரம் கொடுத்தது குற்றம் என்னும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பேராசிரியா் மு. ராமச்சந்திரன் நடுவராக இருந்து காவியம் போற்றும் மேன்மை என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடக்கிறது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ‘கம்பனில் நான் கண்ட...’ என்னும் தலைப்பில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், பாரதி கிருஷ்ணகுமாா், தி.மு.அப்துல்காதா், க.சுமதி ஆகியோரின் சிந்தனை அரங்கம் நடக்கிறது.

அதைத் தொடா்ந்து ‘தாழ்ந்தோா் உயா்வா்’ என்னும் தலைப்பில் நீதியரசா் இரா. சுரேஷ்குமாா் தனியுரையாற்றுகிறாா். மாலை 4.30 மணிக்கு இளம்பிறை மணிமாறனின் ‘காரணமும் காரியமும்’ என்னும் தலைப்பில் தனியுரை இடம் பெறுகிறது.

நீதியரசா் வி. ராமசுப்ரமணியன் உள்ளிட்டோா் அடங்கிய நடுவராயம் முதல் நாள் வழங்கப்பட்ட தீா்ப்பின் மேல்முறையீட்டை விசாரித்துத் தீா்ப்பளிக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி கம்பன் கழகத்தின் நிா்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனா்.