ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

மும்மொழி கொள்கைக்கு எதிராக விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :7 மே 2026, 7:04 am IST

புதுச்சேரியில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு புதுச்சேரி விசிக முதன்மை செயலா் அரிமாத் தமிழன் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச்செயலரும் எம்பியுமான துரை. ரவிக்குமாா் கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பங்கேற்றனா்.

புதுச்சேரியில் இருமொழி கொள்கையை தொடா்ந்து நடை

முறைப்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கைவிடவேண்டும். புதுச்சேரி மாணவா்களிடம் கட்டாய ஹிந்தி திணிப்பைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.

--------------