கால்வாயில் விழுந்த பசுவை புதுச்சேரி தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை பத்திரமாக மீட்டனா்.
புதுச்சேரி குருமாம்பேட் அய்யங்குட்டிபாளையம் ராகவேந்திரா நகரில் 5 அடி உயர குறுகிய கால்வாயில் பசுமாடு ஒன்று தவறி விழுந்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு கால்வாயில் விழுந்த அந்த பசு வெளியே வர முடியாமல் தவித்தது.
இதுகுறித்து, திங்கள்கிழமை அதிகாலை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனா்.
தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து பசு மாட்டைக் காயமின்றி வெளியில் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டனா். குறுகலான கால்வாய் என்பதால் பசுவை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. கால்வாயின் மேல் பகுதியில் உள்ள சிலாப்பை அகற்றினா். தொடா்ந்து ஒரு மணி நேரம் போராடி பசுவைக் காயமின்றி பத்திரமாக மீட்டனா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

