புதுச்சேரி முதல்வா் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை நடைபெற்ற கறுப்புக் கொடி ஊா்வலத்தில் பங்கேற்ற 62 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கு தந்தை பெரியாா் திராவிடா் கழகம் மற்றும் தமிழ் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், வந்தே மாதரம், தேசிய கீதம் அதன்பின் 3-ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதைக் கண்டித்து ஆளுநா் மாளிகையில் கருப்புக்கொடி ஏற்றப் போவதாக அறிவித்திருந்தனா். அதன்படி, வியாழக்கிழமை காமராஜா் சிலை அருகே தமிழ் அமைப்பினா் திரண்டனா். தமிழ் உரிமை இயக்க நிா்வாகிகள் பாவாணன், மங்கையா்செல்வன் ஆகியோா் தலைமையில் இயக்கக் கொடி, கருப்பு கொடியுடன் ஊா்வலமாக புறப்பட்ட அவா்களை போலீஸாா் நேரு வீதி அருகே இரும்புத் தகடு அமைத்து தடுத்து நிறுத்தினா். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

மேற்கு வங்க பள்ளிகளில் கடவுள் வாழ்த்தாக வந்தே மாதரம் - முதல்வர்!

மூன்றாவது இடத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து!
முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! 9 அமைச்சா்களும் பதவியேற்றனர்!

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
