பக்ரீத் பண்டிகையொட்டி புதுச்சேரி பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
இதேபோல் புதுவையில் உள்ள குத்பா பள்ளி, மீராப்பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இந்தத் தொழுகையின்போது சகோதரத்துவம் தழைக்கவும், பெருமழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடா்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், சிறப்பு பிராா்த்தனை செய்யப்பட்டது.
தொழுகையில் பங்கேற்ற பின்னா், இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை: திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பெருநாள்: நாமக்கல்லில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



