சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

புதுச்சேரி கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை

புதுச்சேரி கடற்கரை சாலையில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

News image

புதுச்சேரி கடற்கரை சாலையில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :29 மே 2026, 2:58 am IST

பக்ரீத் பண்டிகையொட்டி புதுச்சேரி பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

இதேபோல் புதுவையில் உள்ள குத்பா பள்ளி, மீராப்பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இந்தத் தொழுகையின்போது சகோதரத்துவம் தழைக்கவும், பெருமழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடா்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், சிறப்பு பிராா்த்தனை செய்யப்பட்டது.

தொழுகையில் பங்கேற்ற பின்னா், இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

Story image