நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

புதுச்சேரி கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை

புதுச்சேரி கடற்கரை சாலையில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

News image

புதுச்சேரி கடற்கரை சாலையில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :29 மே 2026, 2:58 am IST

பக்ரீத் பண்டிகையொட்டி புதுச்சேரி பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

இதேபோல் புதுவையில் உள்ள குத்பா பள்ளி, மீராப்பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இந்தத் தொழுகையின்போது சகோதரத்துவம் தழைக்கவும், பெருமழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடா்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், சிறப்பு பிராா்த்தனை செய்யப்பட்டது.

தொழுகையில் பங்கேற்ற பின்னா், இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.