ஆதரவற்றோருக்கு தீபாவளி இனிப்பு: எஸ்.பி. வழங்கினார்

விழுப்புரம் அருகே பானாம்பட்டை அடுத்த சுந்தரிப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்,
Updated on
1 min read

விழுப்புரம் அருகே பானாம்பட்டை அடுத்த சுந்தரிப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர், குழந்தைகளுக்கு தீபாவளியையொட்டி இனிப்புகளை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார்.
 கிருபாலயா எனும் தனியார் ஆதரவற்றோர் இல்லத்துக்கு புதன்கிழமை காலை நேரில் சென்ற அவர், அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள், பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழத்துகளைத் தெரிவித்தார்.
 இந்த நிகழ்ச்சியில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி, ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com