கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (ஆண்கள்) ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கு.செலின்மேரி தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பா.இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நா.தென்றல் வாசுகி வரவேற்றார். தமிழ் ஆசிரியை ம.மீனாட்சி ஆண்டறிக்கை வாசித்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ), ஆசிரியர் பயிற்றுநர் இரா.இருசன், வட்டார கணக்காளர் கே.குமாரி, எம்.கே.சரவணன், கல்விக்குழுத் தலைவர் கே.குட்டி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் நாடகம், நடனம், குழுநடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பட்டதாரி ஆசிரியர் இரா.ரவிக்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









