ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கரும்புகள் சரிந்து விழுந்ததில் பெண் சாவு

செஞ்சியில் டிராக்டரில் இருந்து கரும்பு சரிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உயிரிழந்தார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:30 am IST

செஞ்சியில் டிராக்டரில் இருந்து கரும்பு சரிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உயிரிழந்தார்.
செஞ்சியில் அழகு நிலையம் நடத்தி வந்தவர் ரவி மனைவி ரம்யா(30). இவர், புதன்கிழமை கடைக்குச் சென்றுவிட்டு, மதிய உணவுக்காக திருவண்ணாமலை சாலை, முல்லை நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது, அவருக்குப் பின்னால் கரும்புகள் ஏற்றி வந்த டிராக்டர் ரம்யாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால், திடீரென டிராக்டர் ஓட்டுநர் வண்டியை நிறுத்திய போது, டிராக்டரில் இருந்த கரும்புகள் ரம்யாவின் மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.