மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லூரியின் 80ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் துணை முதல்வர் ச.திருநாவுக்கரசு வரவேற்றார். கல்லூரி முதல்வர் சு.விஜயகாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.கல்லூரியின் செயலர் இராஜிவ்குமார் இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வேலூர் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மு.வளர்மதி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பேருரையாற்றி, கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டார்.
மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
அவர் பேசுகையில் , ஆதீனத்தின் 18ஆம் பட்டம் சுவாமிகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். சமயப் பணி செய்யும் போதே சமுதாயப் பணியாக 1938ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியை தொடங்கினார். நாம் எதைச் செய்தாலும் நீண்ட காலத்துக்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தைப் பார்க்க வேண்டும் என்பதே நமது வீர சைவ மடத்தின் கொள்கை. தமிழன் நினைத்தால் எந்தப் பதவிக்கும் வரலாம் என்ற எண்ணம் மாணவர்களுக்கு வர வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் குடும்பத்தையும்,உங்கள் சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றார்.
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் இரா.வள்ளி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சட்டவிரோத கைத்துப்பாக்கியுடன் சோயா சாப் விற்பனையாளா் கைது
நன்றியுணர்வால் மனதை நிரப்புங்கள்!

11.5.1976: ஹிந்தி எதிர்ப்பு பென்ஷன் திட்டம் நிறுத்தப்பட்டது
நாளைய மின்தடை குடவாசல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
