ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

விழுப்புரம் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.  

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.  
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி மாணவியர் புல முதன்மையர் 
ஆர்.ராஜேஸ்வரி வரவேற்றார்.   சர்வதேச கால்பந்து சம்மேளன நடுவர் ரூபாதேவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளைத்  தொடக்கி வைத்தார்.   ஒலிம்பிக் கொடியை இ.எஸ்.கல்விக் குழும துணைப் பதிவாளர் சௌந்திரராசன் ஏற்றி வைத்தார்.  கல்லூரி முதல்வர் ஏ.வி.அருணாகுமாரி தொடக்க உரையாற்றினார். 
விளையாட்டுத் துறைச் செயலர் என்.ஜனனி தலைமையில் மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். வீராங்கனைகள்,  விளையாட்டுக்கான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினர். தொடர்ந்து,  பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.  கலை நிகழ்ச்சிகள்,  யோகா மற்றும் தற்காப்புக் கலைகளை செய்து காண்பித்தனர்.   நிறைவில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழுவினருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன நடுவர் ரூபாதேவி பரிசுக் கோப்பைகள் வழங்கிப் பேசினார்.  பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.  கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மனோகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.