மாற்றுத் தினாளிகள் மேம்பாடு குறித்த ஆலோசனை

விழுப்புரத்தில் சக்ஷம் அமைப்பு சார்பில் மாற்றுத்தினாளிகள் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரத்தில் சக்ஷம் அமைப்பு சார்பில் மாற்றுத்தினாளிகள் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் தமிழக, வடக்கு மண்டலத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் நாகரஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்துக்குச் சேவையாற்றி வரும் சக்ஷம் அமைப்பு சார்பில் நிகழாண்டு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித் தனியாக தேவைகளைக் கேட்டறிந்து, அரசு,  அரசு அல்லாத பிற வழிகளில் உதவிகளைச் செய்வது குறித்தும், 10-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், ஈரோடு, சேலம்,  திருவள்ளூர், கஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com