அண்ணாமலை பாலிடெக்னிக்கில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்

உளுந்தூர்பேட்டை வட்டம், பாதூர் ஸ்ரீஅண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) மாணவர்கள் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. 
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை வட்டம், பாதூர் ஸ்ரீஅண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்) மாணவர்கள் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
 பாதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில் கல்லூரித் தாளாளர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
 கல்லூரி முதல்வர் ஆனந்த்பாலாஜி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுகுமார் வரவேற்றார்.
 விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி கணிதவியல் பேராசிரியர் கணேசன், பள்ளியின் தலைமையாசிரியர் கெஜலட்சுமி மற்றும் உதவித் தலைமையாசிரியர் செல்வி சிறப்புரையாற்றினர்.
 இதனைத் தொடர்ந்து செங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாலகுரு மற்றும் குழுவினர் பங்கேற்ற தொழுநோய் குறித்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
 பேரணியில் கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார், பள்ளித் தமிழாசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்படபலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com