மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மாலை அப்பர் சுவாமி குரு பூஜை நடைபெற்றது.
நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் என்ற அப்பர் சுவாமிகளுக்கு ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் இந்தக் கோயிலில் குரு பூஜை, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரமும் அர்ச்சனையும், அவரது தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற பிறகு மஹா தீபாராதனையும் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. குருபூஜைக்கான ஏற்பாடுகளை பௌர்ணமி அமாவாசை குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









