சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மாவட்ட யோகா போட்டி: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On :23 ஜூலை 2018, 9:33 am IST

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்ட யோகா சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் விழுப்புரத்தில் நடைபெற்றது. யோகாசன சங்கத் தலைவர் வெங்கடேசன் போட்டிகளைத் தொடக்கிவைத்தார். பதஞ்சலி யோகா சமிதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத் உடனிருந்தார்.
8 முதல் 10 வயது வரை, 11 முதல் 13 வரை உள்ள குழந்தைகளுக்கு 2 பிரிவுகளாகவும், 14 முதல் 16 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 17 முதல் 20 வயது வரை, 21 முதல் 24 வயது வரை, 25 முதல் 34 வயது வரை உள்ள பெரியவர்களுக்கு 3 பிரிவுகளாகவும், 35 வயதுக்கு மேல் ஒரு பிரிவாகும் என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. 
இதில், சாதாரண யோகாசன முறைகள், இசையுடன் யோகா, நடனத்துடன் யோகா என்று 3 விதமாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து காட்டினர். இதில், ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். 
இந்தப் போட்டியில் தேர்வு பெற்றவர்கள், வரும் ஆகஸ்ட் மாதம் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.