விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்ட யோகா சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் விழுப்புரத்தில் நடைபெற்றது. யோகாசன சங்கத் தலைவர் வெங்கடேசன் போட்டிகளைத் தொடக்கிவைத்தார். பதஞ்சலி யோகா சமிதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத் உடனிருந்தார்.
8 முதல் 10 வயது வரை, 11 முதல் 13 வரை உள்ள குழந்தைகளுக்கு 2 பிரிவுகளாகவும், 14 முதல் 16 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 17 முதல் 20 வயது வரை, 21 முதல் 24 வயது வரை, 25 முதல் 34 வயது வரை உள்ள பெரியவர்களுக்கு 3 பிரிவுகளாகவும், 35 வயதுக்கு மேல் ஒரு பிரிவாகும் என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், சாதாரண யோகாசன முறைகள், இசையுடன் யோகா, நடனத்துடன் யோகா என்று 3 விதமாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து காட்டினர். இதில், ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்தப் போட்டியில் தேர்வு பெற்றவர்கள், வரும் ஆகஸ்ட் மாதம் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






