மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 720 மதுப் புட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை கடத்த முயன்ற 720 மதுப் புட்டிகளை கோட்டக்குப்பம் பகுதியில் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Updated On :23 ஜூலை 2018, 9:36 am IST

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை கடத்த முயன்ற 720 மதுப் புட்டிகளை கோட்டக்குப்பம் பகுதியில் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் உள்ள மது விலக்கு சோதனைச்சாவடியில் தலைமைக் காவலர் பாஸ்கர் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 15 அட்டைப் பெட்டிகளில் மொத்தம் 720 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. ஒரு லட்சம் இருக்கும்.
இது தொடர்பாக காரில் இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அவர் புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஜெயவேல் மகன் சடையப்பன் (42) என்பதும், புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மதுப் புட்டிகளை வாங்கி சென்னைக்கு கடத்திச் சென்று விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மதுப் புட்டிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மது விலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.