மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விழுப்புரம் மாவட்ட இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.


பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விழுப்புரம் மாவட்ட இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் வல்லரசு (17). இவர், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே புலவனூர் கிராமத்தில் வள்ளலார் நகரில் வசிக்கும் தனது உறவினர் ராமராஜன் வீட்டுக்கு வந்தார். திங்கள்கிழமை மதியம் இயற்கை உபாதைக்காக அந்தப் பகுதியில் உள்ள வயல் வெளி பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, மின்சார கம்பி மீது சாய்ந்திருந்த சவுக்கு மரத்தை தொட்டதில், மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே வல்லரசு உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...