செஞ்சியை அடுத்த மேல்களவாய் கூட்டுச்சாலையில் உள்ள அரசு மதுக் கடையுடன் கூடிய மதுபானக் கூடத்தில் புதுச்சேரி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளில் புதுச்சேரியில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போலீஸார் மேல்களவாய் அரசு மதுக் கடையுடன் கூடிய மதுபானக் கூடத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, அங்கு புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 1,622 பிராந்தி வகை மதுப் புட்டிகளையும், 144 பீர் வகை மதுப் புட்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, விழுப்புரம் சாலையைச் சேர்ந்த ராஜீ (எ) சாமிக்கண்ணு மகன் பாபு, செஞ்சி சிறுகடம்பூர் கருணா மகன் கார்த்தி (25) ஆகியோர் மீது செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து, கார்த்தியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாபுவைத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளின் மொத்த மதிப்பு
ரூ 2 லட்சம் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!






