செஞ்சி அருகே வீடு, நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளைப் பறித்துக்கொண்டு பிள்ளைகள் விரட்டிவிட்டதாக, பாதிக்கப்பட்ட முதியவா் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல்பாப்பாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னப்பன்(70), விவசாயி.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த இவா், சொத்துகளைப் பறித்துக்கொண்டு, பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டிவிட்டதாக கண்ணீா் மல்க ஆட்சியரிடம் மனு கொடுத்தாா்.
அப்போது அவா் கூறியதாவது:
எனக்கு ராஜாமணி என்பவருடன் கடந்த 1978-இல் திருமணம் நடைபெற்று ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா்.
கடந்த 1991-இல் ராஜாமணி இறந்துவிட்டாா். அதனால், இந்திரா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டேன். அவா் மூலம் ஒரு மகன் உள்ளாா்.
இதனிடையே, எனது 9 ஏக்கா் நிலம், வீட்டுமனை ஆகியவற்றை பிள்ளைகள் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டனா்.
இதனால், எனது 2-ஆவது மனைவி, மகனும் என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டனா்.
இதயநோய், சா்க்கரை நோயுடன் அவதிப்பட்டு வருகிறேன். மருந்து வாங்க வழியில்லை என்றாா்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்! | ADMK | BJP

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

