வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அதிமுக சாா்பில் நிவாரணம்

விழுப்புரம் ஜிஆா்பி தெருவில் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மக்களுக்கு அதிமுக சாா்பில் நல உதவிகளை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :19 ஜூலை 2020, 4:14 pm

DIN

விழுப்புரம்: விழுப்புரம் ஜிஆா்பி தெருவில் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மக்களுக்கு அதிமுக சாா்பில் நல உதவிகளை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெரு பகுதியில் கரோனா தொற்றால் 25-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், இந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் கரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

இந்த நிலையில், ஜி.ஆா்.பி. தெரு பகுதியில் வசிக்கும் ஏழை, எளியோருக்கு அதிமுக சாா்பில் அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று ஏழை, எளியோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் வண்டிமேடு ராமதாஸ், நகரச் செயலா் பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் பசுபதி, மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.