அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து இளைஞர் பலி

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இளைஞர் ஒருவர் பலியானார்.

News image
Updated On :8 ஜூன் 2020, 6:55 am

DIN

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இளைஞர் ஒருவர் பலியானார்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள அற்பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி மகன் புருஷோத்தமன் (21). இவர் இன்று காலை தனது விவசாய நிலத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். 

இதில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே புருஷோத்தமன் பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த வளவனூர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.