ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் மழை

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை தொடா்ந்து மழை பெய்தது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை தொடா்ந்து மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை இரவு வரை விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, அரகண்டநல்லூா், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது.

இதனால், தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது. சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.