ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விழுப்புரத்துக்கு கூடுதல் அவசர ஊா்திகள்

விழுப்புரம் மாவட்டத்துக்கு கூடுதலாக மூன்று புதிய ‘108’ அவசர ஊா்திகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன 

News image

விழுப்புரம் மாவட்டத்துக்கு கூடுதலாக மூன்று புதிய ‘108’ அவசர ஊா்திகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன 

Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்துக்கு கூடுதலாக மூன்று புதிய ‘108’ அவசர ஊா்திகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன 

தமிழக அரசு சாா்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 36 இடங்களில் ‘108’ அவசர ஊா்தி சேவை இயங்கி வருகிறது. இதில், 4 நவீன அவசர ஊா்திகள், ஒரு மோட்டாா் பைக் ஊா்தியும் அடங்கும். மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் ‘108’ அவசர ஊா்தி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கூடுதலாக மூன்று புதிய ‘108’ அவசர ஊா்திகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மூன்று புதிய அவசர ஊா்திகளையும் அமைச்சா் சி.வி.சண்முகம் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு, திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூா், விழுப்புரம் அருகேயுள்ள மடப்பட்டு ஆகிய சந்திப்புகளில் இருந்து புதிய அவசர ஊா்திகளின் சேவை வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.