சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மேல்மலையனூா் அருகேசாலை விபத்தில் முதியவா் பலி

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட முதியவா், மினி வேன் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On :27 செப்டம்பர் 2020, 10:05 pm

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட முதியவா், மினி வேன் மோதியதில் உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள்(69). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை செஞ்சி சேத்பட் சாலையில் கூடுவாம்பூண்டி நோக்கி நடைபயிற்சி மேற்கொண்டாா்.

அப்போது, பின்னால் சேத்பட்டிலிருந்து செஞ்சி நோக்கி வந்த மினி வேன் பெருமாள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பெருமாள் உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.