தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் கொலைசெய்யப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் வீட்டிற்கு, திங்கள்கிழமை வந்த காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூபாய் 50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினார்.
இந்த சம்பவத்தில் கூட்டமாக வந்து ஊரடங்கு தடையை மீறியும், தொற்று நோய் பரப்பும் விதமாக செயல்பட்டதாக கே எஸ் அழகிரி உள்ளிட்ட 5 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.