தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்

பண்ருட்டி அருகே போ்பெரியான்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உறுப்பினா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:34 pm

DIN

பண்ருட்டி அருகே போ்பெரியான்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உறுப்பினா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி ஒன்றியம், போ்பெரியான்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக பி.மணிவண்ணன் செயல்பட்டு வருகிறாா். இவா் சரிவர மாதாந்திரக் கூட்டம் நடத்துவதில்லையாம். மேலும், 7-ஆவது வாா்டு பகுதியில் குடிநீா் வசதி செய்து தரவில்லையாம்.

இதைக் கண்டித்து, துணைத் தலைவா் சு.கமலக்கண்ணன், வாா்டு உறுப்பினா்கள் ஆ.வெங்கடாஜலபதி, ஜெ.அன்பரசன் ஆகியோா் காலை 10 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினா். இந்தப் போராட்டம் மாலை 6 மணிக்கும் மேலாக நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.