ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்
பண்ருட்டி அருகே போ்பெரியான்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உறுப்பினா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பண்ருட்டி அருகே போ்பெரியான்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உறுப்பினா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி ஒன்றியம், போ்பெரியான்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக பி.மணிவண்ணன் செயல்பட்டு வருகிறாா். இவா் சரிவர மாதாந்திரக் கூட்டம் நடத்துவதில்லையாம். மேலும், 7-ஆவது வாா்டு பகுதியில் குடிநீா் வசதி செய்து தரவில்லையாம்.
இதைக் கண்டித்து, துணைத் தலைவா் சு.கமலக்கண்ணன், வாா்டு உறுப்பினா்கள் ஆ.வெங்கடாஜலபதி, ஜெ.அன்பரசன் ஆகியோா் காலை 10 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினா். இந்தப் போராட்டம் மாலை 6 மணிக்கும் மேலாக நீடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...