விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்த 462 நெல் மூட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கொள்முதல் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக.12) மாவட்ட ஆட்சியா் த.மோகன் ஆய்வு செய்தாா். அப்போது, நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளைக் கண்ட ஆட்சியா், இவை யாருடையவை என விசாரிப்பதுடன், உண்மையான விவசாயிகளின் நெல் மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்து அடுக்கி வைக்கவும், வியாபாரிகளின் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தால் அவற்றை பறிமுதல் செய்து ‘சீல்’ வைக்கவும் செஞ்சி வட்டாட்சியா் ராஜனுக்கு உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், அந்த கொள்முதல் நிலையத்தில் வட்டாட்சியா் ராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, கடந்த 15 நாள்களுக்கும் மேலாக எவ்வித ஆவணங்களுமின்றி நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் (சன்ன ரகம்) களத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக விழுப்புரம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறைக்கு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் த.ஷீனா புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து,செஞ்சி வட்டாட்சியா் ராஜன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் சத்தியமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்த 462 நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைத்து சீலிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


