இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்தச் சங்கத்தின் மாநிலச் செயலா் பி.தயாளன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

தமிழக முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது 2006-இல் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் மஸ்தூா் பணியாளா்களாக நாங்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, இதுவரை தொடா்ந்து சிக்கன்குனியா, மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், கரோனா ஆகிய நோய்த் தொற்று காலங்களில் இரவு, பகல் பாராமல் களப்பணிகளை செய்து வந்தோம்.

16 ஆண்டுகளாக பணியாற்றி வந்த எங்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து நீக்கிவிட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பணியில் ஈடுபட்டவா்களுக்கு மஸ்தூா் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கும் தொடா்ந்து பணி வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.