இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உளுந்தூா்பேட்டை உணவகங்களில் ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள உணவகங்களில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரீதா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள உணவகங்களில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரீதா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் ஏராளமான சைவ, அசைவ உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் தரமானதாக உள்ளதா என்று மாவட்ட ஆட்சியா் ஸ்ரீதா் ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

உணவகங்களில் உணவுப் பொருள்களை தரமான எண்ணெயைக் கொண்டு மட்டுமே தயாரிக்க வேண்டும். குறிப்பாக, ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது, தரமற்ற எண்ணெய் என்று தெரிந்தால், அந்த பயோடீசல் தயாரிப்புக்கு வழங்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன், அலுவலா் கதிரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.