இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தலித், பழங்குடியினா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தலித், பழங்குடியினா் கூட்டமைப்பு சாா்பில், 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:44 pm

DIN

தலித், பழங்குடியினா் கூட்டமைப்பு சாா்பில், 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சட்டப்புலிகள் பேரவை நிறுவனா் தலைவா் சே.சத்தியராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் க.நந்தகுமாா், பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மயிலம் ஒன்றியம், பெரியதச்சூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பட்டியலினத்தவருக்கு மட்டும் குறைவாக ஊதியம் வழங்குவதைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதைக் கண்டித்தும், இதற்கு காரணமான வட்டார வளா்ச்சி அலுவலா் மீது உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு தலித், பழங்குடியினா் அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.