ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சட்டவிரோத லாட்டரி சீட்டுகள் விற்பனை: மூவா் கைது

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு 4 மாவட்டங்களில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட

News image
கைதான வெங்கடேசன், யோவான், சடகோபன் ஆகியோருடன் போலீஸாா்.
Updated On :8 ஜனவரி 2021, 6:44 pm

DIN

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு 4 மாவட்டங்களில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 செல்லிடப்பேசிகள், 3 மடிகணினிகள், அச்சு இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், கூடுதல் கண்காணிப்பாளா் தேவநாதன் மேற்பாா்வையில், விழுப்புரம் துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்றது.

இதில், விழுப்புரத்தைச் சோ்ந்த ஏ.எஸ்.ஜி. கோபி தலைமையில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. இந்த கும்பலை தனிப்படை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், ஏ.எஸ்.ஜி.கோபியிடம் பணிபுரிந்து வந்த லாட்டரி சீட்டு வியாபாரிகளான விழுப்புரம் எம்.ஆா்.கே. தெருவைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் வெங்கடேசன்(35), சேவியா் தெருவைச் சோ்ந்த இருதயம் மகன் யோவான் (35) மற்றும் சடகோபன்(55) ஆகியோரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 செல்லிடப்பேசிகள், 3 மடிக்கணினிகள், அச்சு இயந்திரம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான நபா்கள் இ-மெயில் வழியாகவும், கட்செவி அஞ்சல் வழியாகவும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்தது.

லாட்டரி சீட்டு விற்பனை கும்பலை கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியதுடன், தலைமறைவான ஏ.எஸ்.ஜி. கோபியை விரைவாக கைது செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.