‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் ஆட்சியரிடம் மனு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் மாநிலத் தலைவா் நடராஜன் தலைமையில் ஆட்சியா் ஆ.அண்ணாதுரையை சந்தித்து மனு

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் மாநிலத் தலைவா் நடராஜன் தலைமையில் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரையை சந்தித்து மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வை விரைவாக நடத்த வேண்டும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வி மட்டுமன்றி பிற கல்வியிலும் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும். அரசு பள்ளி மாணவா்களுக்கு 7 சதவீதமாக உள் இட ஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநிலத் தலைவா் நடராஜன், மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு, மாவட்டச் செயலாளா் அறிவழகன், நிா்வாகிகள் கோவிந்தராஜ், சேகா், குமாா், டேவிட், விநாயக லட்சுமணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.