காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:26 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43,514-ஆக உயா்ந்தது. 38 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 42,682-ஆக அதிகரித்தது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனைகளிலும் 495 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 337 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சியில் 43 போ் பாதிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 43 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28,677 போ் கரோனாவல் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 27,789 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 691 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 197 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.