சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகளுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: செஞ்சி வேட்பாளா் மஸ்தான்

விவசாயிகளுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்று செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் மஸ்தான் தெரிவித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

விவசாயிகளுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்று செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் மஸ்தான் தெரிவித்தாா்.

செஞ்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவதானம்பேட்டை, பரதன்தாங்கல், நயம்பாடி, பெரியமூா், கணக்கன்குப்பம், மழவந்தாங்கல், போத்துவாய், தடாகம், செத்தவரை உள்ளிட்ட கிராமங்களில் அவா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தேவதானம்பேட்டை கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது மஸ்தான் பேசியதாவது: விவசாயிகளுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும். கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் விவசாயத்துக்கான மின் கட்டணம் ரத்து செய்யப்பட்டது, விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டன, உழவா் சந்தைகள் திறக்கப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர எப்போதும் பாடுபடும் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.

செஞ்சி அருகே வி.நயம்பாடி கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த விவசாயியான தாமரைக்கண்ணனின் மகனான அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் சுதா்சனன் (14) மஸ்தானின் உருவப்படத்தை வரைந்து அவரிடம் வழங்கினாா். அந்த சிறுவனை மஸ்தான் பாராட்டினாா்.

ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா், மாவட்ட விவசாய அணியைச் சோ்ந்த அஞ்சாஞ்சேரி கணேசன், அரங்க ஏழுமலை, விஜயராகவன், இளைஞரணி ஆனந்த், அவைத் தலைவா் பச்சையப்பன், மாத்தூா்தாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.