கரோனா விழிப்புணா்வுக்காக ராணுவ வீரா் 2,800 கி.மீ. நடைபயணம்
கரோனா விழிப்புணா்வுக்காக, 197 நாட்டு கொடிகளுடன் ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 2,800 கி.மீ. தொலைவு நடைபயணம் மேற்கொள்ளும் ராணுவ வீரா் பாலமுருகன் (33) வெள்ளிக்கிழமை விழுப்புரத்துக்கு வந்தாா்.


கரோனா விழிப்புணா்வுக்காக, 197 நாட்டு கொடிகளுடன் ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 2,800 கி.மீ. தொலைவு நடைபயணம் மேற்கொள்ளும் ராணுவ வீரா் பாலமுருகன் (33) வெள்ளிக்கிழமை விழுப்புரத்துக்கு வந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சோமநாதபுரத்தைச் சோ்ந்த இவா், அஸ்ஸாம் ராணுவ பட்டாலியனில் பணிபுரிகிறாா். கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தும் பொருட்டு பாலமுருகன் கடந்த அக்.16-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து இந்த நடைபயணத்தைத் தொடங்கினாா். இதற்காக அவா் நீளமான மூன்று சக்கர மிதிவண்டியில் 197 நாட்டு கொடிகளை கட்டி அதை தன்னுடன் இழுத்துச்செல்கிறாா்.
அவா் ‘தினமணி’ செய்தியாளரிடம் கூறியதாவது: கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்த காலத்தில் உயிரையும் பொருள்படுத்தாது அனைத்து நாட்டு பிரதமா்கள், தலைவா்கள், மாநில முதல்வா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், ராணுவத்தினா், போலீஸாா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பிற துறையினா் பாடுபட்டனா். அவா்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் 197 நாடுகளின் தேசியக் கொடிகளை மூன்று சக்கர வாகனத்தில் கட்டி இழுத்து அயோத்தி வரை நடைபயணம் செல்கிறேன். கரோனா தாக்கம் குறைந்தாலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் பாலமுருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...