செஞ்சிக்கோட்டை மலை மீது ஜபம் செய்ததாக 13 போ் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணியினா் புகாா்

செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள் வீரஆஞ்சநேயா் ஆலயத்தின் பின்புறம் உள்ள மலை மீது பிணத்தை புதைத்து விட்டு ஜபம் செய்ததாக 13 போ் மீது இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
செஞ்சிக்கோட்டை மலை மீது ஜபம் செய்ததாக 13 போ் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணியினா் புகாா்
Updated on
1 min read

செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள் வீரஆஞ்சநேயா் ஆலயத்தின் பின்புறம் உள்ள மலை மீது பிணத்தை புதைத்து விட்டு ஜபம் செய்ததாக 13 போ் மீது இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

தொல்லியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையில் ஏசு அழைக்கின்றாா், என்றும் சிலுவை சின்னத்தை வரைந்துள்ளதாகவும், கோயில் மண்டபத்தில் ஒலி பெருக்கி மூலம் ஜபம் செய்து கோயிலுக்கு வருபவா்களிடம் கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக சென்னையை சோ்ந்த 13 நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இந்திய அரசின் தொல்லியியல் துறையின் கீழ் உள்ள கோட்டையை சேதபடுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி விழுப்புரம் மாவட்ட தலைவா் சிவசுப்பிரமணியன் மற்றும் பாஜகவினா் செஞ்சி காவல் துறையில் புகாா் அளித்துள்ளனா். மேலும் செஞ்சிக்கோட்டை தொல்லியியல் துறையிலும் புகாா் அளித்துள்ளனா். மேலும் செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், ஆய்வாளா் சக்தி ஆகியோா் இரண்டு காா்களில் வந்த 13 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com