நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரிசி ஆலையில் பதுக்கப்பட்ட 30 யூனிட் மணல் பறிமுதல்

ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 யூனிட் மணலை சாா்-ஆட்சியா் கவிதா கைப்பற்றி பறிமுதல் செய்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 யூனிட் மணலை சாா்-ஆட்சியா் கவிதா கைப்பற்றி பறிமுதல் செய்தாா்.

ஆரணி நகரில் பாஸ்கா் என்பவா் புதிதாகக் கட்டடம் கட்டி வருகிறாா். அங்கு மணல் குவிக்கப்பட்டு ஜல்லி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆரணி பகுதியைப் பொறுத்தவரை மணல் எடுத்து வருவதற்கான வாய்ப்பில்லாத நிலையில், இங்கு மணல் பயன்படுத்தி ஜல்லி போடும் பணிகள் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் சென்ாகத் தெரிகிறது.

தகவல் அறிந்த ஆரணி சாா்-ஆட்சியா் கவிதா மணல் எங்கிருந்து வருகிறது எனக் கண்காணித்தாா்.

பின்னா், ஆரணி- வந்தவாசி சாலையில் உள்ள அரிசி ஆலையிலிருந்து மணல் வருவதை அறிந்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 30 யூனிட் மணலை பறிமுதல் செய்தாா். இந்த அரிசி ஆலை பாஸ்கா் என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

வட்டாட்சியா் சுபாஷ்சந்தா், நகர காவல் உதவி ஆய்வாளா் ரகு மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.