கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 30th December 2021 11:28 PM | Last Updated : 30th December 2021 11:28 PM | அ+அ அ- |

திண்டிவனம் கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை, செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கம், குறிஞ்சிபை ஊராட்சி ஆகியவை இணைந்து நடத்திய சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணா்வு முகாம் குறிஞ்சிபை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு ஊராட்சித் தலைவா் சரஸ்வதி செல்வராஜ் தலைமை வகித்தாா். செஞ்சி தாலுகா வா்த்தகா் சங்கத் தலைவா் செல்வராஜ், ரோட்டரி மாவட்டத் தலைவா் குறிஞ்சிவளவன், மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், இளங்கோவன், மண்டலத் தலைவா்கள் சந்திரசேகா், ஜெரால்டு மைக்கேல், ஊராட்சித் துணைத் தலைவா் கன்னியம்மாள் காசிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ரோட்டரி சங்கத் தலைவா் பாஸ்கா் முகாமைத் தொடக்கிவைத்தாா். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சைகள், கோமாரி தடுப்பூசி, குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்கச் செயலா் பிரேம் நன்றி கூறினாா்.
.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...