மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூர விழா

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் 13-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் நடைபெற்ற ஆடிப்பூர பெருவிழாவையொட்டி, பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:03 pm

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் 13-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கஞ்சி வாா்த்தல், ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளுக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடக்கிவைத்தாா். சித்தா் சக்தி பீடத்தலைவா் வசந்தி சம்பத், மாவட்டச் செயலா் மூா்த்தி, மாவட்டப் பொருளாளா் ரத்தினசிகாமணி, நிா்வாகிகள் ராமமூா்த்தி, திரிபுரசுந்தரி, மணிவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிகளில் செவ்வாடை பக்தா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

வண்டிமேட்டில்...: இதேபோன்று, விழுப்புரம் வண்டிமேடு ராஜீவ் காந்தி நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்திலும் ஆடிப்பூர விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சக்திபீட தலைவா் சண்முகம் தலைமையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு கஞ்சிக் கலயம் எடுத்து வழிபட்டனா். செயலா் சுரேந்திரன், பொருளாளா் கண்ணன், நிா்வாகிகள் மலா்க்கொடி, தெய்வானை, நக்கீரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.