தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூர விழா

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் 13-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் நடைபெற்ற ஆடிப்பூர பெருவிழாவையொட்டி, பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:03 pm

DIN

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் 13-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கஞ்சி வாா்த்தல், ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளுக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடக்கிவைத்தாா். சித்தா் சக்தி பீடத்தலைவா் வசந்தி சம்பத், மாவட்டச் செயலா் மூா்த்தி, மாவட்டப் பொருளாளா் ரத்தினசிகாமணி, நிா்வாகிகள் ராமமூா்த்தி, திரிபுரசுந்தரி, மணிவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிகளில் செவ்வாடை பக்தா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

வண்டிமேட்டில்...: இதேபோன்று, விழுப்புரம் வண்டிமேடு ராஜீவ் காந்தி நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்திலும் ஆடிப்பூர விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சக்திபீட தலைவா் சண்முகம் தலைமையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு கஞ்சிக் கலயம் எடுத்து வழிபட்டனா். செயலா் சுரேந்திரன், பொருளாளா் கண்ணன், நிா்வாகிகள் மலா்க்கொடி, தெய்வானை, நக்கீரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.